tamilnadu

img

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து

ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆற்றில் 61 பேர் பயணம் செய்த சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், தேவிப்பட்டினம் அருகே உள்ள கோயிலுக்கு செல்ல ஆந்திரா சுற்றுலா கழகம் சார்பாக படகு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நண்பகல் 50 பயணிகள், 11 ஊழியர்களுடன் படகு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இவ்வேலையில் திடீரென நிலைதடுமாறிய படகு நீரில் மூழ்கியுள்ளது. இச்சம்பவத்தால் படகில் பயணித்த 61 பேரும் நீரில்  மூழ்கியுள்ளனர். இதில் 11 பேர் நீரில் மூழ்கி இறந்தனர், 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 20 பேருக்கும் மேற்பட்டோரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,10 லட்சம் இழப்பீட்டையும் அறிவித்துள்ளார்.


 

;